7 கட்டமாக நடைபெற்று வரும் 18ஆவது மக்களவை தேர்த லின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு செவ்வாயன்று நடைபெற் றது. 10 மாநிலங்கள், 2 யூனியன் பிர தேசங்களில் நடைபெற்ற இந்த மூன் றாம் கட்ட வாக்குப்பதிவில் 64.4 சத வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலிரண்டு கட்ட வாக்குப்பதி வில் தங்களுக்கு சாதகமான சூழல் இல்லை என உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட பாஜக வெறுப் புப் பேச்சு, வாக்குப்பதிவின் போது வன்முறை உள்ளிட்ட பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங் கேற்றி தேர்தலில் வெற்றி பெற முயன்று வருகிறது.
குறிப்பாக மோடி கூட தான் பிரத மர் என்பதை மறந்து இந்து - முஸ் லிம் மக்களிடையே மோதலை தூண்டும் வகையிலும், பாகிஸ் தான் பெயரை அடிக்கடி கூறியும், சனாதனத்திற்கு ஆபத்தும் என்றும், “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந் தால் ராமர் கோவில் இடித்து விடு வார்கள்” என்றும் அழுகை தொனி யில் பிரச்சார மேடைகளில் புலம்பி வருகிறார். தனது புலம்பல் பேச்சை மக்கள் கண்டுகொள்ளாத நிலை யில், “கோத்ரா 2002” சம்பவம் போல தேர்தல் கால வன்முறையை தொடங்கியுள்ளது பாஜக. ஏற்கெ னவே திரிபுரா மாநிலத்தில் “இந் தியா” கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என தேர்தல் அதிகாரிகள் மூலம் பாஜக அடா வடி வேலையில் ஈடுபட்டது. அது போல, மூன்றாம் கட்டத் தேர்தலின் போது உத்தரப்பிரதேச மாநிலத் தில் இஸ்லாமியர்களை வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் ஆளும் பாஜக அரசு போலீசார் மூலம் தடுத்துள்ளது.
இஸ்லாமியப் பெண்கள் மீது தாக்குதல்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சம்பல் மக்களவை தொகுதி யில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்மாலி, ஓவாரி உள் ளிட்ட பகுதிகளில் போலீசார், சோதனை என்ற பெயரில் வாக்க ளிக்க வந்த இஸ்லாமியர்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை பறித்து பிழை உள்ளது எனக் கூறியும் இஸ்லாமி யர்களின் தாடியை பிடித்து இழுத் தும், தடியடி நடத்தியும் வாக்குச் சாவடி பகுதியில் இருந்து விரட்டி யுள்ளனர். இதே போல குழந்தை களுடன் வந்த பெண்களை ஈவு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தி யுள்ளனர். மேலும் அஸ்மாலி, ஓவாரி பகுதிகளில் மட்டுமின்றி சம்பல் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 181,182,183, 184 ஆகிய எண்களை கொண்ட வாக்குச்சாவ டியில் இஸ்லாமிய மக்களின் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை பறித்து உத்தரப்பிரதேச போலீசார் வாக்குச்சாவடியில் இருந்து வெளி யேற்றியுள்ளனர்.
வாக்குச்சாவடியை கைப்பற்றிய பாஜகவினர்
சமாஜ்வாதி தலைவர் அகி லேஷின் மனைவி டிம்பிள் போட்டியிடும் மெயின்புரி (உத்த ரப்பிரதேசம்) தொகுதிக்கு மூன் றாம் கட்டத் தேர்தலின் வாக் குப்பதிவு நடைபெற்ற நிலை யில், வாக்குச்சாவடியை கைப் பற்றியும், சமாஜ்வாதி, காங்கி ரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்ட ணிக் கட்சியினர் மீது பாஜக வினர் தாக்குதல் நடத்தியும் அத்துமீறலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுக்கு ஆதர வாக இருந்த நிலையில், இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
குஜராத் வாக்குச்சாவடிகளில் “ராமர்”
தேர்தலில் மதம், சாதி உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள் ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் “இந்தியா” கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே தவிர பாஜக விற்கு இல்லை என்றாகிவிட்டது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் மதம், சாதி, வகுப்புவாதம் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டாலும் அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. அதாவது பாஜக வின் கைப்பாவை போல இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலின் பொழுது குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ராமர் படம் கொண்ட போஸ்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விவ காரம் தொடர்பாக காங்கிரஸ் - ஆம் ஆத்மி அடங்கிய “இந்தியா” கூட்டணி புகார் அளித்தாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை.